Friday 17 April 2020

வ சுப.மாணிக்கனார்


'தோன்றிற் புகழோடு தோன்றுக'' எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழிலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்மொழியை உணர்வு மொழியாகவும், சிந்தனை மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் போற்றியவர். புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் வாழ்ந்த வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் 17.4.1917 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தவர்.
"அண்ணாமலை' என்ற தம் இயற்பெயரை, மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டால், "மாணிக்கம்' என மாற்றிக் கொண்டார் எனச் சொல்லப்படுகிறது.
இளம் வயது முதலே பிள்ளைகளுக்குத் திருக்குறள், திருவாசகம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய இலக்கியங்களைப் பிழையின்றி தகுந்த ஒலிப்புமுறையுடன் சொல்லிக் கொடுப்பாராம். அத்துடன் திருக்குறளில் ஓர் அதிகாரத்தை முழுதும் மனப்பாடமாகப் படித்து ஒப்புவித்தாலோ அல்லது பிழையின்றி எழுதிக் காட்டினாலோ பத்து முதல் இருபது பைசா வரைக் கொடுத்து ஊக்கப்படுத்துவாராம்.
ஒருமுறை காரைக்குடியில் இல்லத்தின் ஓர் அறையில் வ.சுப.மா., ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, கொசு ஒன்று அவரது தோள்மீது அமர்ந்து குருதியைக் குடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டுவிட்ட அவருடைய மகள் தென்றல், அந்தக் கொசுவை அடித்து அப்பாவிற்கு நன்மை செய்து விட்டதாக நினைத்து அவரின் பாராட்டை எதிர்பார்த்து நின்றிருந்தாராம். அப்போது
வ.சுப.மா., ""படிப்பதில் கவனம் இருக்கும்போது கொசு கடிப்பது எப்படித் தெரியும்? நீ எனது தோளில் அடித்ததால் என் சிந்தனையோட்டம் தடைப்பட்டுவிட்டது'' என்று கடிந்து கொண்டாராம்.
படிப்பதையும் எழுதுவதையும் வ.சுப.மாணிக்கனார் ஒரு தவமாகவே செய்து வந்திருக்கிறார். எல்லோரும் உறங்கிய பின் உறங்கி, அவர்கள் விழிக்கும் முன் விழித்து தமது கடமைகளைச் செம்மையுடன் செய்ததன் விளைவாகத்தான் கம்பர், வள்ளுவர், அகத்திணை ஆராய்ச்சி (தமிழ்க்காதல்), இலக்கியச்சாறு, கொடை விளக்கு, நெல்லிக்கனி, மாமலர்கள், மாணிக்கக்குறள், மனைவியின் உரிமை, உப்பங்கழி, தலைவர்களுக்கு உலக முரசு, இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப்பட்டயங்கள், தற்சிந்தனைகள் முதலிய முப்பதுக்கும் மேலான நூல்களை அவரால் எழுத முடிந்திருக்கிறது. இந்நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் 2007ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய போது இவரின் தமிழ்ப் புலமையைக் கண்ட அரசர் முத்தையவேள் செட்டியார் 1970இல் தமது அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு அழைத்து தலைவர் பொறுப்பை அளித்துப் பெருமைப்படுத்தினார். ஏழு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் செய்த தமிழ்ப்பணிகள் இன்று விருட்சங்களாய் வளர்ந்து நிற்கின்றன.
சங்கப் பாக்களின் நுட்பங்களையெல்லாம் கட்டுரைகளாக வடித்தவர். பிசிராந்தையார், "யாண்டு பலவாக' என்று தொடங்கும் புறப்பாடலில், "மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' என்று குறிப்பிட்டிருப்பார். இதில் வரும் "ஒடு' என்ற சிறு சொல் மனைவி ஒருத்தி, மக்கள் பலர் எனப் பிரித்துப் பொருள் தருவதாக அமைகிறது. இச்சொல் இடம் பெறாதிருக்குமானால் மனைவியும் பலர், மக்களும் பலர் எனப் பொருள் மாறுபட்டிருக்கும் என்பதனை வ.சுப.மாணிக்கனார் சுவையுடன் தெளிவுபடுத்துவார்.
இவர் உரைநடையில் கையாளும் சொல்லாக்கங்கள் பல அரியவை.""காற்று எனும் சொல் மக்கள் வழக்கிற்குரியது என்றும், வளி என்னும் சொல் இலக்கிய வழக்கிற்குரியது என்றும் பலர் கூறுவார்கள். ஆனால், பொதுமக்கள் சூறாவளி என்னும் வழக்கில் வளி என்னும் சொல்லினை மிக எளிதாகப் பயன்படுத்துகிறார்கள்'' என்று "இலக்கிய விளக்கம்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
வ.சுப.மாணிக்கனார் எதையும் புதிய நோக்கில் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர். "எந்தச் சிலம்பு?' எனும் நூலில் கண்ணகியின் சிலம்புதான் சிலப்பதிகாரம் என்று பெயர் இடுவதற்குக் காரணம் எனப் பலரும் கூறிவரும் நிலையில், இவரோ பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவியின் சிலம்புதான் நூல் பெயர்க்குக் காரணம் எனக் கூறுவது புதுமை.
முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் எனும் மூன்றும் நிறைந்த கடலைக் குறிக்கும் சொல் என்பது புறநானூற்று உரையாசிரியர்களின் கருத்து. முந்நீர் எனும் சொல் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூவகைச் செயல்பாடுகளையும் குறிப்பது என்பது அடியார்க்குநல்லாரும், நச்சினார்க்கினியரும் கூறும் கருத்து. இவ்விரு கருத்துகளையும் மறுத்து வ.சுப.மாணிக்கனார், ""முந்நீர் எனும் சொல் முப்புறம் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒரு பெருநீர்ப்பரப்பைக் குறிப்பது என்பதனையும், தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதையும் இடைக்கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை'' (தமிழ்க்காதல், ப.152) என்று குறிப்பிடுகிறார்.
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரின் மாணவர் என்கிற தனித்த அடையாளம் வ.சுப.மாணிக்கனாரிடம் எப்போதுமுண்டு. தமது இல்லத்திற்குக் "கதிரகம்' என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அவரது எழுத்தும் பேச்சும் தமிழ்நலம் சார்ந்தவையாகவே இருந்தன. தமிழ் வழிக் கல்விகாகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எத்தனை இடர்வரினும் நடுவுநிலையோடு நின்று உண்மையின் அடையாளமாய்த் திகழ்ந்தவர். எழுத்திலோ, பேச்சிலோ எவர் பிழை செய்யினும் நெஞ்சுரத்துடன் உடனே வெகுண்டெழுந்து நேருக்கு நேர் சுட்டிக்காட்டும் இயல்பினர்.
ஒவ்வொரு மனிதரும் ஒரு குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதே வ.சுப.மா. வின் வேண்டுகோள். கவர்ச்சி தரக்கூடிய கேளிக்கைப் பேச்சுகளில் பொழுதைக் கழிப்பதை விடுத்து சங்க இலக்கியம், திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், ஆத்திசூடி உள்ளிட்ட உயர்வான நோக்குடைய இலக்கியங்களைக் கற்று வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்பதே வ.சுப.மா. வின் கருத்து. ஒரு நூற்றாண்டைக் கடந்தும் (24.4.1989) தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நின்று வாழும் வ.சுப.மாணிக்கனார், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஏற்றிய ஒளி கலங்கரை விளக்கமாய் என்றும் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழின் மறுவுருவாய் வாழ்ந்து மறைந்த மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவைப் பலரும் சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு அவருக்கென தனியொரு நினைவிடம் அமைத்து, விழாவெடுத்து, சிறப்பு செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் பெருமை கொள்ளும். அந்நாள் எந்நாளோ?

இன்று: வ.சுப.மாணிக்கனாரின் (17.4.1917) பிறந்த நாள்

Thursday 16 April 2020

கழுத்துரு / கழுத்திரு

கழுத்துரு / கழுத்திரு 
 
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்  திருமங்கலநாண்  (தமிழில் தாலி வடமொழி கலப்பில்   திரு மாங்கல்யம் ) கழுத்துரு அல்லது கழுத்திரு எனப்படும்.

மணமகளின் கழுத்தில் உருக்கொண்டிருப்பதால் கழுத்துரு 

மணமகளின் கழுத்தில் 
திருவாக இருப்பதால்   கழுத்திரு  

மணமகளின் கழுத்தில் மணமகன் திருவாகிய திருமங்கலநாணை, கடைமணிகளில்   இருந்து வரும் புற (வெளி) அக (உள்) நாண்களின்(தாலிக்கயிறுகளின்) இருமுனையையும்     குச்சி,, தூம்பு(தும்பு ) இடை,,  துவாளை(தூவாளை);  இட்டு  பூட்டுவதால் திருப்பூட்டுதல்.

இலக்குமி ஏத்தனம் -௧ 1 
ஏத்தனம் -௪ 4 திருமங்கலம்(திருமாங்கல்யம்)-௧ 1 
உரு. ௧௯ 19 ,
சரிமணி. ௪ 4 
கடைமணி   ௨ 2 
துவாளை(தூவாளை) ௧ 1 ,
 குச்சி;;;;; ௧ 1 ,
தும்பு (தூம்பு) ௧ 1 
ஆக,, திருமங்கல நாணின் உருப்படிகள்(பாகங்கள்)௩௪ 34.

 முப்பத்திநான்கின் தமிழ் பெயர் விளக்கமும் பின் அதன் வடிவமைப்பின் உள் பொதிந்த செய்தியும்காண விழைந்ததன் விளைவு.

இலக்குமி ஏத்தனம். ௧ 1

நகரத்தார் ஆசிவகம் ,,சமணம்,,சைவம் ஆகியவற்றை பின்பற்றி வந்து இன்று சைவத்தில் நிலை கொண்டுள்ளார்கள். ஆசிவகத்தில் வந்த இருயானை நான்கு கைகளுடன்கூடிய இலக்குமியே அவர்தம் இல்லங்களின் நுழைவாயிலிலும்,,முகப்பு,சாமி வீட்டு நிலைகளிலும் இருக்கும் .இது இலக்குமியை ஈர்க்கும் கருவியாகும். எனவே இது மணமகன் செய்யும் வணிகத்தில்,, இலக்குமியை ஈர்க்க புறநாணில்(வெளிக்கயிற்றில்) நடுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஏத்தனம். ௪ 4

இச் சொல்லுக்கு தமிழ் அகராதியில் கருவி,,பாத்திரம் என இருபொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது.புறநாணில்(வெளிக்கயிற்றில்)உள்ள இரு ஏத்தனம் மணமகனின் கைகளையும்,, அக நாணில் (உள்கயிற்றில்) உள்ள இரு ஏத்தனம் மணமகளின் கைகளையும் குறிக்கின்றன .

திருமங்கலம் (திருமாங்கல்யம்) ௧ 1

இது அக நாணில் (உள்கயிற்றில்) நடுவில் வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.இதன் வடிவமைப்பு வள்ளுவரின் ///// மங்கலம் என்ப மனைமாட்சி/////என்பதை காட்டுவதுபோல் வீட்டின் கடகால் (அஸ்திவாரக்கால்) இரண்டு ,, வாசல்,, கூரைஆகியவற்றோடு நீள் சதுரமாக வீடு வடிவில் ,, வாசலின் உள்நோக்கினால் இலக்குமி இருப்பதாக இருக்கும் .

௧௯ 19 ,

உரு = வடிவம். நிறம், பாட்டு, அச்சம், பொருள், மந்திரம் என தமிழில் பொருள் கூறப்பட்டுள்ளது.மேலும் /////உரு ஏற திரு ஏறும் திருமூலர்///// திருமந்திரம் இயற்றிய சித்தர் வாக்கு,,இப்படிப்பட்ட உரு ௧௧ 11 புறநாணில்(வெளிக்கயிற்றில்) ௮ 8 அக நாணில் (உள்கயிற்றில்) அமைக்கப்பட்டிருக்கும் .

சரிமணி. ௪ 4 ,

இது வலம்,இடம்  பக்கத்திற்கு இரண்டாக அக நாணிலும்,,புறநாணிலும் கடைமணி நடுவிருக்க  அமைந்து,,  இருநாணும் சரிந்து உரசிக் கொள்ளா வண்ணம் பார்த்துக்கொள்ளும் பணியை செய்வதால்,, இது சரிமணி எனப்படுகிறது.

கடைமணி  ௨ 2 ,

இது அக ,புற நாண்களின் கடைசியில் வலம் இடம் பக்கத்திற்கு ஒன்றாக  அமைவதால் கடைமணி எனப்படுகிறது.

துவாளை(தூவாளை) ௧ 1

புறநானூறு - 334. தூவாள் தூவான்!

பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 

காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்5பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,10உரவேற் காளையும் கைதூ வானே. 

மன்றத்தில் விளையாடும் சிறுவர்களின் ஆரவார ஒலியைக் கேட்டதும் முயல் படப்பையில் ஒடுங்கிக்கொள்ளுமாம். அந்தச் சிறுவர்கள் விளையாட்டு மண்டை கொண்டவர்கள். முயல் பழனத்தில் விளைந்திருக்கும் கண்புப் புல் போன்ற மயிரினை உடையது. மனையோள் உணவு வழங்கும் அரவம் பாணரின் வயிற்றுப் பசியைப் போக்குவதாலும், நாடி வந்தவர்களுக்குப் பரிசில் வழங்குவதாலும் உணவு உண்ணும் அரவ ஒலியை உண்டாக்கும் மனைவி அந்த அரவ ஒலி உண்டாக்குவதைக் கைவிடவே மாட்டாள். காளை வழங்கும் அரவம் அந்த மூதில்லில் வாழும் காளை பகையரசன் யானையை வீழ்த்தி அது அணிந்திருந்த ஓடைப் பொன்னைத் தன் அரசனிடமிருந்து பரிசிலாகப் பெற்றுவந்ததைத் தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு வழங்குவதைக் கைவிடமாட்டான். 

தூவாளே என்ற சொல் பற்றிக்கொள்ளும் (பூட்டிக்கொள்ளும்) என்பதை குறிக்கிறது,,இதிலிருந்து தூவாளை    பிறந்து,,துவாளை என்று,,இந்த அணிகலன் பெயரும்  அதிலிருந்து மருவியிருக்கலாம்  ஏனெனில் இருநாணும் சேரும் இடத்தில் பூட்டின் அமைப்பை செயலாக்கும் மூன்றில் ஒன்றாக இது  இருக்கிறது.

குச்சி ௧ 1 ,

கழுத்துருவின்,,பெண்கழுத்தின் வலது நாணின் நுனியில் துவாளை,,இடது நாணின் நுனியில் குச்சி கட்டப்பட்டிருக்கும் .பருமனில் மிக்க குறைந்த கோலின் வடிவு குச்சி .

தும்பு (தூம்பு) ௧ 1

தும்பு எனில் தமிழில் நார்,,கயிறு ,என்றே பொருள் சொல்லப்பட்டிருக்கிறது தூம்பு என்பதற்கு குழாய் வடிவமுள்ள இசைக்கருவி,,நீர்த்தாரை ஆகியன குறிக்கப்படுகிறது.இந்த அணிகலன் நடுவில் குழாய் போன்றே வருகிறது எனவே இது தூம்பு ஆக இருந்து,,அதனுள் தும்பு (கயிறு) நுழைக்கப்படுவதால் நாளடைவில் மருவி தும்பு ஆகிவிட்டது.

உள்ளார்ந்த பொருள் ,செய்தி,தத்துவம் 

புறநாணில்(வெளிக்கயிற்றில்)
வணிகனின் இல்வாழ்க்கையில்,, வணிகம் சார்ந்த புற (வெளி)பணிகளை வணிகனான  மணமகன்,, இலக்குமி ஏத்தன(கருவி)துணையை  மனதில் உரு ஏற்றி,, பல உருவாக தன் இரு கைகள் எனும் ஏத்தனத்தால்(கருவியால்),, அறவழியில் செய்து திருவை (பொருளை) ஈட்டுதல்.

அக நாணில் (உள்கயிற்றில்)
மணமகள் கணவன் ஈட்டிய திருவை (பொருளை) தன் இருகை ஏத்தனம் (பாத்திரம்)கொண்டு சிந்தாமல் சிதறாமல் பெற்று அதை பல உரு ஆக்கி திருமங்கல (திருமாங்கல்ய)    இலக்குமியாய் அகத்தில் என்றென்றும் கொலு வீற்றிருப்பது..

கழுத்துருவில் அகம் புறப் பணிகள் யார் யாருடையதென தெளிவு படுத்தப்பட்டதுடன் -புறத்தில் ஆண் நாண்,, அகத்தில் பெண் நாண்,, என அமைத்ததும் மிக அறிவார்ந்த ஒன்று.

ஆண்,,பெண் இருபாலர் குறியீடாக கழுத்துரு (திருமங்கலமாகிய திருமாங்கல்யம்) இருப்பது ,,நம் முன்னோரின் சம பார்வையை அறிவுத்திறனை வெளிப்படுத்துகிறதன்றோ!! !!!!!

மேலும் நிறைவாக 
தற்காலத்தில் குச்சி ,,தும்பு,,துவாளை மூன்றும் திருப்பூட்டுதலின் போது கழுத்துருவில் இணைக்காமல் மணமகன் மூன்று முடிச்சை போடுகிறார்,,பின்னர் இம் மூன்றும் இணைக்கப்படுகிறது.

கழுத்துரு எனப்படும் கழுத்திரு பண்டைய காலங்களில்,, முன்பு கடற்கரை நகரமான பூம்புகார் போன்ற இடங்களில் வாழ்ந்தபோது இயற்கை பொருட்களான,,நண்டின் கால்களை பதப்படுத்தியும்,,முத்து,,பவளம் சேர்த்தும் செய்ததாகவும் பின்னர் உலோகங்களான-வெள்ளீயம்,,பித்தளை,,வெள்ளிக்குமாறி,,தற்போது நூற்றாண்டுகளுக்கு  மேல் தங்கத்தில் செய்துவருவதாகவும் இனப் பெரியவர்களால் சொல்லப்படுகிறது.

---இராமு இராமநாதன்.இராம.நா 

Sunday 8 April 2018

ஊடுருவலும்__காரணங்களும்

#ஊடுருவலும்__காரணங்களும்:

நாட்டுகோட்டை நகரத்தார் சமூகத்துடன் நாங்களும் இணைய விரும்புகின்றோம் என்று கடந்த இருபது ஆண்டுகளாகவே நடந்து வரும் விவாதங்கள், மெல்ல இப்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது தனிப்பட்ட கோவில் பிரிவுகளை அதன் உயர்மட்ட மனிதர்களின் துணையுடன் அல்லது அவர்களின் அனுசரணையுடன் அணுகி இந்த இணைப்பை உறுதி செய்யலாம் என்ற எண்ணத்தில் காய்கள் நகரத்தப்படுகின்றன.

இதன் பின்னணியில் வெளிச்சத்தில் தெரியாத செல்வாக்கு கொண்ட நபர்களின் பின்புலம் இருப்பதையும் உணர முடிகின்றது.

இப்போது கடந்த இருபது ஆண்டுகளாக உறுதிக்கோட்டை வட்டகை என்ற பெயரில் இல்லாத வட்டகையினை இருப்பதாகக் காட்டி, சொல்லாத கதைகளை வரலாறாக பதித்து, ஒரு நீண்ட கால திட்டத்தில் சம்பந்தமில்லாத ஒரு இனக்குழுவை இன்றைய நகரத்தார் சமூகத்துடன் இணைக்க முயற்சிப்பது வரலாற்றுப் பிழையாகும்.



பிரிந்துவிட்டதாகச் சொல்லப்படுவதும், மீண்டும் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் நாட்டுக் கோட்டை நகரத்தார் அடையாளங்களை அருகிருந்து போலச் செய்து, அதன் பின்னர் அவற்றையே பண்பாடாக்கி உரிமை கோருவது என்பது எப்படி உள்ளது என்றால், #ஷெர்வானி அணிந்து மாப்பிளை அழைப்பு நடத்துவதால், #மார்வாரி ஆகிவிடலாம் என்பது போலத்தான்.

போலச் செய்வது போலியாகும். போலிகளை உண்மையான இருத்தல், ஒரு போதும் ஏற்காது.

#நாம்__நாமாகவே இருப்போம்:

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம், நீண்ட நெடிய பண்பாட்டுப் பதிவுகளை தங்கள் வாழ்வியலுடன் தக்க வைத்திருப்பதும், அதனை இனறளவும் பின்பற்றும் ஒரு இனக்குழுவாகவும் இருந்துவருவது தமிழர் மரபில் மாறாத சுவடுகளையும் பதியவைத்துள்ளதையும் யாவரும் அறிவர்.

#வட்டகையும் பிரிவிவுகளும் :

வட்டகை என்பது குன்றக்குடி மலையினை நடுவாக வைத்து  திசைவாரியாகப் பிரிக்கப்பட்டதே. இந்த வட்டகை என்பது, பொதுவில் பெயர்கள் எல்லாம் திசையின் அடிப்படையிலும், நிலம் சார்ந்த புவியியல் அடிப்படையிலும் அமையப்பெற்றது. நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் பாரிய பண்பாட்டின் தனித்துவத்தின் அடையாளமாகவும் உள்ளது. எந்த ஒரு வட்டகையும் ஊரின் அடிப்படையில் இருந்ததில்லை. அப்படியிருக்க உறுதிக் கோட்டை என்று ஊரின் பெயரில் வட்டகை பிரிப்பது மேற்சொன்னபடி போலியானதே. போலிகள் ஒரு போதும் உண்மையாகா. நிற்க.



உறுதிக் கோட்டை வட்டகைக்கு ஒரு கதையினைச் சொல்லி அதனை வரலாறாக்கி படிப்படியாகவே ஒவ்வொரு கோவில் பிரிவினரையும் அணுகுதல் என்ற அட்டவணைப்படி செய்து வரும் முயற்சிகள் இன்று தீவிரம் அடைகின்றது.

இன்று இவர்கள் சொல்லும் குதிரைக் கதையுடன், நாளையே இன்னொரு இனக் குழுவினர் #மாட்டுவண்டிக்_கதையுடன் மனுப்போட முயல்வார்கள்.

அப்போது நம்மவர்கள், இவர்களிடம் விவாதித்தது போல எந்த விவாதமும் இன்றி ( இனி வரும் காலத்தில் அதற்கான நேரம் இருக்காது ) ஏற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே தற்போதைய முயற்சியின் முழுமையான நோக்கம் என்பது தெட்டத் தெளிவாகின்றது.

கடந்த 1980 களின் தொடர்ச்சியாக, நகரத்தார்களின் புள்ளியாக சேர்க்க வேண்டும், கோவில் மாலை (சந்தனம்??!!) வேண்டும் என்பதும், அதற்கு முதல் முயற்சிகளின் தோல்விக்குப் பின், தனித் தனி கோவில் பிரிவுகளின் அமைப்புகளை அணுகுவதும் வாடிக்கையாகி, இன்று மேற்சொன்னபடி நகரத்தார் அடையாளங்களை மட்டுமல்ல, தொன்று தொட்டு நகரத்தர்களால் கட்டமைக்கப்பட்ட கோவில், அறக்கட்டளைகள் போன்றவற்றை குறிவைத்தே நகர்வுகளும், அத்தோடல்லாமல் நகரத்தார் குடிமரபு சாராத ஏனையவர்களையும் இணைக்கும், அல்லது உள்ளே நுழைக்கும், முயற்சியாகவே இன்று பரிணாமம் பெற்றுள்ளது.

முதலில் இதுபோன்ற பேரத்திற்கே அன்று தேவை எதுவும் இல்லை. அவர்கள் ( உறுதிக்கோட்டை ) டிரஸ்டி நிர்வாகம், கோவில் அறக்கட்டளைகள், தொலைதூர ஆன்மீக வழிபாட்டுத் தலங்களில் உள்ள விடுதிகள், கோவில் உரிமைகள் ஆகியவைகளையே முதன்மை நோக்கமாக இருத்தி, அதனை  நோக்கி செயல்படுவதும் வெளிப்படையாகவே உள்ளது. இந்த நிலையில் அவர்களின், அவர்கள் சொல்லும் நான்கு கோவில் பிரிவில் ஒரு கோவில் பிரிவான மாத்தூர் கோவில் டிரஸ்டில், அவர்கள் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்ச்சியினை அந்த நிர்வாகக் குழுவினர், கோவிலூர் மடத்திற்கு எழுதிய கடிதத்தின் நகல் அப்படியே அவர்கள் நடத்தி வரும் அப்பச்சி மலர் என்ற உறுதிக்கோட்டை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது, அனைத்து கோவில் நாட்டுகோட்டை நகரத்தார்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு மடாதிபதிக்கும், ஒரு கோவில் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பரிவர்த்தனை எளிய நகரத்தார் புள்ளிகளுக்கு தெரிவதற்கு முன்னர் வேற்று சமூகத்தினர் நடத்தும் பத்திரிகையில் வெளியிடுவதும், மீண்டும் அதனை வைத்தே காரணம் காட்டி அனைத்து ஊர் நகரத்தார்களிடமும் ஆதரவு #கையெழுத்து__வேட்டையும், புகைப்படமும் எடுப்பதும், மேலும் இது அதி வேகமான நகர்வுகளுடன் ஒரு கோவிலில், முதலில் புள்ளிகளை இணைப்பது என்ற நோக்கில் நடந்து வருகின்றது. இதற்கு எளிய மக்களை, பெண்கள் குறைவாக உள்ளனர், ஆகவே உருதிக்கொட்டையினை இணைப்பது அவசியம் என்ற #பொய்யான தகவலையும் இவர்களை சேர்த்தால் பெண் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்ற  #மாயையும் தோற்றுவித்து கையெழுத்து வாங்கி புகைப்படம் எடுக்கின்றனர்.



உண்மை என்னவெனில் அங்கேயும் சரி, எங்கேயும் சரி பெண் பிள்ளைகள் விகிதம் குறைவுதான். அதில் நமது நாட்டுகோட்டை நகரத்தார் சமூகம்  ஒரு செயற்கையான சிக்கலை உருவாக்கி திருமணத் தடைகளை பெருக்கி வருவதாலேயே இந்த நிகழ்வு.

ஆகவே குதிரைக் கதையினை இணைத்து, பின்னர் மாட்டுவண்டியுடன் வரும் இன்னொரு கூட்டத்தையும் இணைக்க வேண்டும் என்று வரும் போது, நம்மிடம் இன்று உள்ள கட்டுக் கோப்பும் கூட இல்லாமல்   நாமே #வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழர் சாராத மலையாளிகள், தெலுங்கர்கள் என்று எல்லோரும் உள்ளே இருப்பார்கள் என்பது மட்டுமே நிச்சயமாகிவிடும்.

இந்தச் சூழ் நிலையினை உருவாக்க, இப்படியொரு நிலை உருவாக எந்த ஒரு  #தனிக்__கோவிலும் தானாக ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தறியாமல் எடுத்தல் கூடாது. காரணம், ஒரு கோவில் டிரஸ்டிகள், புள்ளிகளாய் இணைப்பதனால் மற்ற கோவில் புள்ளிகளும் பாதிக்கப்டுவார்கள். இதை சற்றும் உணராமல் அவசர முடிவுகள் எடுப்பது கூடாது என்று பொறுப்புமிக்க இடத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்.

மேலும் தேவகோட்டை ஜமீன் வகையில் உள்ள ஐயா சோம.நாராயணன் செட்டியார் அவர்கள் இவ்  விடயத்தில் முனைப்பு காட்டுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.?? காரணம் கானாடுகாத்தான் மு.அ.மு.இராமசாமி செட்டியார் அவர்கள் பிள்ளை கூட்டிய போது, கோவில் மாற்றி பிள்ளை கூட்ட வேண்டாம் என்று கடிதம் எழுதியவர் இன்று எந்த முகாந்திரமும் இல்லாமல் மாத்தூர் கோவிலில் புள்ளிகள் இணைப்பது என்று தனது செல்வாக்கில் நகரத்தார் சிலரிடம் முனைப்புடன் செயல்பட்டு அதற்கான ஆதரவு திரட்டுவது, மற்ற கோவில்களை அவர் கருத்தில் கொண்டுள்ளாரா ??  அல்லது ஒரு கோவிலில் இணைத்துவிட்டால், மற்ற கோவில் பிரிவினர் தானாகவே இணைக்கும் சூழல் உருவாகும் என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றாரா ?? என்பதை நகரத்தார்களில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளுக்கும், ஒவ்வொரு தனி மனதருக்கும் கேட்கும் உரிமையில் இந்தக் கேள்விகள் தானாகவே எழுந்துவிடுகின்றது.

ஆனால் பதில் எங்கிருந்து வரும் ????

ஜமீன் என்பதும், ராஜா சர் என்பதும் மரியாதைக்குரிய பட்டங்களாகும். அவைகள் ஒரு போதும் நகரத்தார்களைக் கட்டுப்படுத்தாது. அதனை மீறி இப்படி தன்னிச்சையாக செல்வாக்கினைப் பயன்படுத்தினால் எப்படி ஏற்புடையதாகும் ?? கோவில், பொது நலன், கல்வி ஆகியவற்றில் மேற்படி இரண்டு குடும்பங்களின் பங்களிப்பு போற்றுதலுக்குறியதே. ஆயினும், புள்ளிகளாய் இன்று அனுமதித்தால், அடுத்த நொடியே  #மலையாளிகளையும் கூட ஏற்பதற்கு இன்றைய நிலையில் தயக்கம் காட்ட மாட்டார்கள், பிறகு என்ன ?? நாதெள்ளா சம்பத், நெல்லி குப்புகள் என்று  வரிசையாக புள்ளி வரி ஏற்க  வேண்டியதுதான்.

ஏற்கனவே மேற்படிகளில் சில #உருப்படிகள்,  #உதிரிகளாய் வந்து போகின்றன. இன்று விட்டால் நம்மவர்களே சிலர் பாக்கு வைக்கவும் சித்தமாக இருப்பதை மறத்தல் கூடாது.

ஆகவே இணைப்பு, கனைப்பு என்று ஊடுருவலை ஊக்குவிப்பதை விடுத்து, தற்போதைய சூழலில் நம் சமூகத்தின் குடும்ப அமைப்புகளை நெறிப்படுத்தும் முறையினையும், சில பலருக்காக சங்கங்கள், டிரஸ்டுகள் என்பதை விடுத்து, நம் ஐயாக்கள் சுய நலமின்றி உருவாக்கிய அறச் செயல்களை அனைவரும் பங்கெடுத்து நல்வழிப்படுத்தும் படி நமது கட்டமைப்புகளையும் வாழ்க்கையினையும் மேம்படுத்தும் சிந்தனையில் ஈடுபடுவோம்.

நம்மைப் போல ஆவணங்களைப் படித்து கழுத்துரு கட்டுகின்றேன் என்பவர்களும், ஷெர்வானி போட்டு மாப்பிளை அழைப்பு நடத்தும் மார்வாரிகள் குறித்தும் சிந்திக்காமல், நாம்  நாமாக இருப்போம்.  நமது பண்பாட்டில் மாற்றார் ஊடுருவலை தவிர்ப்போம்,

தேவையற்ற விவாதங்களை விடுப்போம் என்று உறுதி ஏற்போம்.

அன்புடன்,
நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.

ஆக்கம் -- மேலவட்டகை மெய்கண்டான்.
28/8/16

Tuesday 23 May 2017

#செட்டிநாட்டு_சித்திரகுப்த_நாயனார்_பூசை :::


செட்டிநாட்டு பகுதிகளில் ஆச்சிகள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறைகளில் ஒன்று சித்திரகுப்த நாயனார் பூசை. இந்த பூசையானது முன்பு ஆச்சிமார்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு முறையான இருந்து வந்துள்ளது. தற்போது இந்த வழிபாட்டு முறையானது நேரம் இன்மை காரணமாக பலரும் கடைபிடிப்பது கிடையாது சிலர் இன்றும் இந்த வழிபாட்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.




சித்தரகுப்பத நாயனார் பூசையானது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரதமும் முழுநிலவும் கூடும் நாளில் சித்திரகுப்த நாயனாரை நினைந்து பகல்பொழுதில் எதுவும் உண்ணாது நோன்பு இருந்து மாலையில் வழிபடுவர். இந்த நோன்பின் நோக்கம் நமது வாழ்வில் புன்னியங்கள் அதிகம் செய்திடவும் பாவங்கள் செய்யதிடாமல் இருக்கவும் செய்த பாவங்களில் இருந்து விடுபட பாவ புண்ணிய கணக்கு எழுதும் சித்திரகுப்த நாயனாரை தோன்றிய சித்திரை முழுநிலவு நாளில் அவரை நினைத்து வழிபாடானதுகடைபிடிக்கப்படுகின்றது 


.
முன்பு நகரத்தார்கள் திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கும் சாமான்களில் வெள்ளி மற்றும் வெண்கலத்தில் இந்த வழிபாட்டு பொருட்களான நிறைகுடத்திற்கான கலசம், தேங்காய், மாவிலை , ஏடு எழுத்தாணி , பாவர்னக் கிண்ணம் ( சிறிய 16 கிண்ணங்கள் ) குலையுடன் கூடிய மாங்காய் வெற்றிலை பாக்கு போன்ற பொருட்களையும் செய்து வைப்பர் சற்று வசதிபடைத்தவர்கள் வெள்ளியிலும் வெண்கலத்திலும் ஒருப்செட் செய்து வைப்பர். முன்பு திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கு வெள்ளிச் சாமான்களில் ஏடு எழுத்தாணி கட்டாயம் இடம்பெற்று இருக்கும்.

இந்த நோன்பானது இரண்டு விதமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு விதம் பாவர்னக் கிண்ணத்தில் (16 சிறிய கிண்ணங்கள்) நவதானியங்கள் , பஞ்சு , உப்பு , புளி மிளகாய், தட்டைப்பயறு , அருசி போன்றவற்றை எடுத்து வைத்தும் ( சில இடங்களில் பாவவர்ன கிண்ணத்தை சுலகின் மேல் வைத்து வழிபடுவர் )
மற்றொரு வகை இந்த பாவவர்ன கிண்ணத்த்தில் தானியங்கள் எதுவும் வைக்காது வழிபடுவதும் என்பது ஒருவகையான வழிபாட்டு முறை . தானியங்கள் வைப்பது மட்டுமே மாறுபடும் மற்றபடி இம்முறைகள் எல்லாம் ஒன்றாகவே அமைந்திருக்கும் .




சித்திரகுப்த நாயனார் வழிபாடானது பெரும்பாலும் மாலையில் விளக்கு ஏற்றிவைத்து நடுவிட்டுக் கோலமிட்டு ஒரு மனையிட்டு சித்திரகுப்பதர் உருவம் வரையத் தெரிந்தவர்கள் பச்சரி மாவில் வரைந்து வைத்தும் அல்லது மனைப்பலகையில் ஏடு எழுத்தாணி வைத்து மலர்சரங்கள் கொண்டு அலங்கரித்து உப்பு மற்றும் இனிப்பு கொழுக்கட்டை , பாயசம் ,பொங்கல் , மாவிளக்கு ,நீர்மோர் , பானகம் , வெள்ளரிக்காய் , கொத்தோடு மாங்காய் , குலையுடன் தேங்காய் மற்றும் நுங்கு , முக்கனிகள் , மற்றும் தாம்பூலம் வைத்து இயன்ற பலகாரங்கள் ( தென்குழல் , அதிரசம், சீடை , சீப்புசீடை , பணியாரம் ,வடை பொன்றவை ) செய்து வைத்து சித்திரகுப்த நாயனார் கதையை குடும்பமாய் அமர்ந்து படித்து முடித்தபின் வென்சங்கு முழங்கி நிவேதனம் செய்து தீபாரதனை கண்டபின் அன்றைய இரவு முழு நிலவின் உதயத்தை கண்டு வழிபட்டதுடன் நோன்பானது நினைவு பெரும். அன்றய தினம் வீட்டு உணவில் தட்டைபயறு , எருமைப்பால் அல்லது எருமைத்தயிர் சேர்த்து கொள்வதை ஒரு மரபு . சித்திரகுப்த நாயனார் கதையை அன்றைய தினம் கேட்டாலே புண்ணியம் பாவங்கள் குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

---ஆ.தெக்கூர் . இராம.நா.இராமு

கூட்டமும் அவை எழுப்பிய கேள்வியும்

காரைக்குடியில் கோல்டன் சிங்கார் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 45 பேர் என அறிகிறேன்.







இந்த கூட்டத்தில் பேசிய சிலர்,சொன்ன புள்ளிவிபரம்,32-35 வயதை கடந்த 850 நகரத்தார் பையன்கள் திருமணம் செய்ய பெண் இல்லாமலும்,சுமார் 150 பெண்கள் திருமண வயதை கடந்து திருமணம் ஆகாமல்,முதிர் கண்ணியாக,இருப்பதாக சொல்லியதுடன், இதற்க்கு தீர்வாக,மற்ற இனங்களில் இருந்து பெண் எடுத்து,பெண் இல்லாத குறையை போக்கவேண்டும் என பேசினார்களாம்!

கேள்வி -1

ஒரு ஹோட்டல்,40-45 பேர் கூடி பேசி எடுக்குற முடிவு,ஒன்பது கோயிலை சேந்த,ஒன்றறை லட்சம் நகரத்தார்களை எப்படி கட்டுப்படுத்தும்? நகரத்தார் மலர் பத்திரிக்கை நடத்தும் இளங்கோ அவர்கள் இந்த கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து,தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களை,ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக, நகரத்தார்களின் குரலாக்குவது ஏன்?




கேள்வி -2

இது போல கூட்டம் நடத்துவதற்க்கு பதில், திருமண வயதை கடந்த நகரத்தார் ஆண்களையும்,பெண்களையும் ஒரே
இடத்திற்க்கு அழைத்து,செட்டிநாட்டிலோ, சென்னையிலோ,சுயம்வரம் நடத்தினால் தீர்வு கிடைக்கும் அல்லவா?
நம் நகரத்தார் இனத்தை சேர்ந்த கைம் பெண்கள்,விவாகரத்து ஆன பெண்கள், ஆகியோருக்குமறுவாழ்வளித்து, திருமணத்திற்க்கு பெண்கள் இல்லாத குறையை போக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லவா?

கேள்வி -3

32-35 க்கு மேல்,திருமணமாகாமல் பையன்கள் இருக்க காரணம்...தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளாடு பையனை பெற்றவர்கள் இருப்பதும்,
பையனுக்கு படிப்பு குறைவாகவும்,
மாத வருமானம் குறைவாகவும்,
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கும் பட்சத்தில்,
பொண்ணை பெற்றவர்கள் மனதில்,
இவன் நம் பெண்ணை வைத்து காப்பாத்தவானா?என்ற ஐய்யத்தினால்
பெண் குடுக்காமல், திருமணங்கள் தள்ளிப்போனவர்களா?
இல்லை எல்லா தகுதியும் இருந்து பெண்கள் கிடைக்காததால் திருமணம் நடக்கவில்லையா? அப்படி என்றால்,
இப்பொழுதும் வருடத்துக்கு பல நூறு திருமணங்கள் செட்டிநாட்டில் நடந்து கொண்டு தானே இருக்கின்றது?


என் மனசுல பட்டது...
பொண்ணு இல்லன்னு, அதுக்கு தீர்வா,
யார் வேண்ணா,யார வேண்ணா கலியாணம் பண்ணிக்கலாம்னு, கூட்டம் போட்டு முடிவெடுத்தா?அது இன அழிப்பை நோக்கிய பாதையே தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட கலப்பட இனத்துக்கு பெயர் தான் என்னவோ?மொத்தத்தில்,இது போன்ற கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதே சாலச்சிறந்தது!!

--- திரு. @Arun Muthu காரைக்குடி.